’எனக்கும் தோனிக்கும் கூட சண்டைன்னு சொன்னாங்க’: சேவாக்
உண்மை என்னவென்று தெரியாமல் எதையும் சொல்ல முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் பிரச்னை இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. உலகக் கோப்பை தொடரின் போது இந்த பிரச்னை அதிகமானதாகவும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் இது வெளிப் படையாகத் தெரிந்தது என்றும் கூறப்பட்டது. அப்போது வீர்ர்கள் தங்களுக்குள் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளி யிட்டனர்.
விராத் வெளியிட்ட புகைப்படத்தில் ரோகித்தும், ரோகித் வெளியிட்ட புகைப்படத்தில் விராத்தும் இல்லாததால், மோதல் உண்மைதான் என்று கூறப்பட்டது. ஆனால், களத்தில் இருவரும் நன்றாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.
இந்த மோதல் குறித்து வீரேந்திர சேவாக் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ’ ஒரு குடும்பத்தில் நான்குபேர் இருந்தால், அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதும் வெளியில் செல்ல வேண்டும் என்பதும் அவசியமில் லை. ஆனால், விழாவில் எல்லோரையும் பார்க்க முடியும். விராத் கோலியும் ரோகித்தும் ஒன்றாக சாப்பிடச் செல்லவில்லை என்பதால் அவர்களுக்கு பிரச்னை என்று சொல்லிவிட முடியாது.
அவர்கள், அதுபற்றி சொல்லாதவரை, அல்லது அதற்கான ஆதாரம் இல்லாதவரை, எதையும் சொல்ல முடியாது. எனக்கும் தோனிக்கும் கூட சண்டை இருந்தது என்று கூறினார்கள். ஆனால், எங்களுக்குள் எந்த பிரச்னையும் இருந்ததில்லை. இது போன்ற தகவல்களை யார் கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை கோலிக்கும் ரோகித்தும் எந்தப் பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.