மகளிர் உலகக் கோப்பை: ஷபாலி வர்மா 'டக் அவுட்' நிதானமாக விளையாடும் இந்தியா

மகளிர் உலகக் கோப்பை: ஷபாலி வர்மா 'டக் அவுட்' நிதானமாக விளையாடும் இந்தியா
மகளிர் உலகக் கோப்பை: ஷபாலி வர்மா 'டக் அவுட்' நிதானமாக விளையாடும் இந்தியா

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று, பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறது. இந்த போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 9 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்து இருக்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: “திரும்பவும் முதல்ல இருந்து நடந்து வாங்க” - கோலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரோகித்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com