முதல் டி20 தொடரை கைப்பற்றுவாரா கோலி

முதல் டி20 தொடரை கைப்பற்றுவாரா கோலி
முதல் டி20 தொடரை கைப்பற்றுவாரா கோலி

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நாளை நடைபெறவுள்ளது.

சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. கடைசி ஆட்டத்தில் வெற்றியை வசமாக்கி, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். விராட் கோலி தலைமையில் இந்திய அணி, இதுவரை சொந்த மண்ணில் எந்தத் தொடரையும் இழக்கவில்லை .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com