தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் விஷயத்தில் மத்திய அரசின் அனுமதிக்காகவும் பிசிசிஐ காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்ட வீரர்கள், தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும்முன் 8 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டனர். இருப்பினும், ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், கே.எல் ராகுல் உள்ளிட்டோர் பயோ-பபுள் வளையத்திற்குள் சேர்வது குறித்து பி.சி.சி.ஐ.யிடமிருந்து தகவல் வரவில்லை எனக் கூறப்படுகிறது.