சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் பாலோன் தி ஓர் விருது இந்த ஆண்டு ரத்து 

சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் பாலோன் தி ஓர் விருது இந்த ஆண்டு ரத்து 
சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் பாலோன் தி ஓர் விருது இந்த ஆண்டு ரத்து 

கால்பந்தாட்ட உலகில் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் மிகச் சிறப்பாக விளையாடும் வீரருக்கு கொடுக்கப்படும் பாலோன் தி'ஓர் விருது இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை அந்த விருதை கடந்த 64 ஆண்டுகளாக கொடுத்து வரும் 'பிரான்ஸ் புட்பால்' குழுமம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் புட்பால் வீரருக்கு ஊக்கமளிக்கும் விதமாக இந்த விருதை அறிமுகம் செய்தார் கேபிரியல் ஆனோட். தொடக்கத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த இந்த விருது பின்னாளில் உலகம் முழுவதும் விளையாடுகின்ற சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கும் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டன. 
இந்த விருதை இதுவரை அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி ஆறு முறை வென்றுள்ளார். போர்ச்சுகலின் கிறிஸ்டியானா ரொனால்டோ ஐந்து முறை இந்த விருதை வென்றுள்ளார். 
நடப்பு ஆண்டில் கால்பந்தாட்ட போட்டிகளை நடத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கலினால் இந்த விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com