தாரங்காவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை

தாரங்காவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை

தாரங்காவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை
Published on

இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்காததால், அந்த அணியின் கேப்டன் தாரங்காவுக்கு 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசாமல், 3 ஓவர்கள் தாமதமாக வீசியது. கடந்த ஜூன் மாதம் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் போதும் இலங்கை அணி இதே பிரச்னையில் சிக்கியது. இதுபற்றி விசாரணை நடத்திய ஐ.சி.சி. போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட், மூன்று மாதத்துக்குள் 2-வது முறையாக மெதுவாக பந்து வீசியதால், இலங்கை கேப்டன் உபுல் தரங்காவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதித்தார்.

தரங்காவுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், அடுத்த இரு ஒரு நாள் போட்டிக்கு இலங்கை அணியின் பொறுப்பு கேப்டனாக சமரா கபுகேதரா செயல்படுகிறார். டெஸ்ட் அணி கேப்டன் தினேஷ் சண்டிமால், திரிமன்னே ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com