முத்தரப்பு டி20: தினேஷ் கார்த்திக், பாண்டே பவரில் வென்றது இந்தியா!

முத்தரப்பு டி20: தினேஷ் கார்த்திக், பாண்டே பவரில் வென்றது இந்தியா!

முத்தரப்பு டி20: தினேஷ் கார்த்திக், பாண்டே பவரில் வென்றது இந்தியா!
Published on

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிப் பெற்றது.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்திய அணியில் ரிஷாப் பண்டுக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். மழையை முன்னிட்டு ஒன்றரை மணி நேரம் தாமதமாக போட்டித் தொடங்கியது. இதனால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக குசால் மெண்டிஸ் 38 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். உனட்கட், சேஹல், விஜய் சங்கர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சிக்சர் மற்றும் பவுண்டரியுடன் ரன் கணக்கைத் தொடங்கிய ரோகித் சர்மா, நின்று சாதிப்பார் என்று பார்த்தால், தனஞ்செயாவின் சுழலை இறங்கி அடிக்க, அது கேட்சாகி வெளியேறினார். அவர் 7 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஏமாற்றினார். முந்தைய போட்டிகளில் சிறப்பாக ஆடிய தவானும் தனஞ்செயாவின் சுழலுக்கு 8 ரன்னில் இரையானார். அடுத்த வந்த கே.எல்.ராகுலும் சுரேஷ் ரெய்னாவும் அதிரடி காட்டினர். சுரேஷ் ரெய்னா, 15 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து, தேவையில்லாத ஷாட்டை ஆடி வெளியேறினார். கே.எல்.ராகுல் ஹிட் விக்கெட் முறையில் 18 ரன்களுக்கு அவுட் ஆக, பரபரப்புப் பற்றிக் கொண்டது போட்டியில்.


அடுத்து வந்த மணீஷ் பாண்டேவும், தினேஷ் கார்த்திக்கும் வசமாக வந்த பந்துகளை விளாசியதை அடுத்து, 17.3 ஓவர்களில் இந்திய அணி 153 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. தினேஷ் கார்த்திக் 25 பந்தில் 39 ரன்களும் மணீஷ் பாண்டே 31 பந்துகளில் 42 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றியின் மூலம் முதல் லீக் போட்டியில் தோற்றதற்கு இலங்கையை பழிவாங்கிக் கொண்டது இந்திய கிரிக்கெட் அணி.

நாளை நடக்கும் 5 வது லீக் போட்டியில் பங்களாதேஷை மீண்டும் எதிர்கொள்கிறது இந்திய அணி.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com