இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: மழை காரணமாக தாமதம்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: மழை காரணமாக தாமதம்!
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: மழை காரணமாக தாமதம்!

இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் வெறும் 11 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ள நிலையில் மழை காரணமாக தாமதமாகி உள்ளது. 

முதல் இன்னிங்ஸில் இந்தியா 132 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தை காட்டிலும் இந்தியா 51 ரன்கள் பின்தங்கி உள்ளது. இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டமும் உணவு இடைவேளைக்கு பிறகு பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போதும் ஆட்டத்தை நடத்துவதில் மழை குறுக்கிட்டுள்ளது. 

இந்தியாவுக்காக கே. எல். ராகுல் மற்றும் ரிஷப் பந்த் களத்தில் உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com