டெஸ்ட் கிரிக்கெட்: சுருண்டது தென்னாப்பிரிக்கா, வென்றது இலங்கை!

டெஸ்ட் கிரிக்கெட்: சுருண்டது தென்னாப்பிரிக்கா, வென்றது இலங்கை!
டெஸ்ட் கிரிக்கெட்: சுருண்டது தென்னாப்பிரிக்கா, வென்றது இலங்கை!

தென்னாப்பிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வந்தது.இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 338 ரன்களும், தென்னாப்பிரிக்கா 124 ரன்களும் எடுத்தன. 214 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் சேர்த்து டிக்ளர் செய்தது. கருணாரத்னே 85 ரன்களும், மேத்யூஸ் 71 ரன்களும் குணதிலகா 61 ரன்களும் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து இலங்கை அணி, தென்னாப்பிரிக்காவுக்கு 490 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

இந்த இலக்கை நோக்கி களம் இறங்கிய தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை, சுழற்பந்து வீச்சாளர்கள் ஹெராத், தில்ருவான் பெரேரா, தனஞ் ஜெயா ஆகியோர் திணறடித்தனர். எந்த வீரரும் நிலைத்து நிற்கவில்லை. டி புருயின், பவுமா ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்க்கப் போரா டியது. பவுமா 63 ரன்களில் அவுட் ஆனார். டி புருயின் சதமடித்தார். அவர் 101 ரன்கள் எடுத்து ஹெராத் பந்தில் அவுட் ஆக, ஆட்டம் முடிவுக்கு வந்தது. 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாப்பிரிக்க அணி.

இதன் மூலம் 199 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் ஹெராத் 6 விக்கெட்டுகளையும் பெரேரா, தனஞ்செயா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com