“ஆஸ்திரேலியாவில் நடந்தத மறந்துடுங்க.. புதுசா விளையாடுங்க” - வாசிம் ஜாபர் அட்வைஸ்

“ஆஸ்திரேலியாவில் நடந்தத மறந்துடுங்க.. புதுசா விளையாடுங்க” - வாசிம் ஜாபர் அட்வைஸ்
“ஆஸ்திரேலியாவில் நடந்தத மறந்துடுங்க.. புதுசா விளையாடுங்க” - வாசிம் ஜாபர் அட்வைஸ்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் 5 ஆம் தேதியன்று இந்த நீண்ட நெடுந்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. “இந்தியா இந்த தொடரை எளிதாக வெல்லும்” என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இந்தியா ஆஸ்திரேலியாவில் நடந்ததை முற்றிலுமாக மறக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர். 

“இது ஒரு புதிய தொடர். ஆஸ்திரேலியாவில் நடந்ததை மறந்து விட்டு இங்கிலாந்துக்கு எதிராக உத்வேகத்துடன் விளையாட இந்திய அணி தயாராக வேண்டும். சொந்த மண்ணில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம் தான். இருந்தாலும் இங்கிலாந்தை ஈசியாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 

அதே போல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர், தாக்கூர் மற்றும் நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அசத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார் அவர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com