இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை: ஏக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை: ஏக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை: ஏக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Published on

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று மாலை 3 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

12ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் களைகட்டி வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

முதல் போட்டியில் தென்னாப்ரிக்க அணியை தோற்கடித்த உற்சாகத்தில் இந்திய அணி இருக்கிறது. ரோகித் ஷர்மா ஃபார்முக்குத் திரும்பியது இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. பந்துவீச்சில் யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் கை கொடுத்தனர். ஷிகர் தவான் நல்ல தொடக்கத்தை கொடுத்தால் இந்திய அணிக்கு பலமாக இருக்கும்.

ஆஸ்திரேலிய‌ அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸையும் வீழ்த்தியிருக்கிறது. ஓராண்டு தடைக்குப் பிறகு வந்த வார்னர், முதல் போட்டியிலேயே வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இரண்டாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் வேகத்தில் விறுவிறுவென விக்கெட்களை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை, அனுபவ வீரர் ஸ்டீவன் ஸ்மித், குல்டர் நைட் உடன் சேர்ந்து கரைசேர்த்தார்.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அசத்தி வருகின்றனர். பலம் வாய்ந்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான போட்டி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com