"அட பின்னாடி டிராக்டர் வருதுபா!" - பிட்ச் விவகாரத்தை கிண்டலடித்த முன்னாள் வீரர்

"அட பின்னாடி டிராக்டர் வருதுபா!" - பிட்ச் விவகாரத்தை கிண்டலடித்த முன்னாள் வீரர்
"அட பின்னாடி டிராக்டர் வருதுபா!" - பிட்ச் விவகாரத்தை கிண்டலடித்த முன்னாள் வீரர்

இந்தியப் பிட்ச் குறித்து ஜிம்பாப்வே முன்னாள் விக்கெட் கீப்பர் கேப்டன் ததேந்தா தைபு நக்கல் செய்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே அகமதாபாத்தில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்ட் போட்டி இரண்டே நாள்களில் முடிவடைந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது. ஆனால் அகமதாபாத் பிட்ச் மிக மோசமாக தயாரிக்கப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர்களும், இங்கிலாந்து வீரர்களும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இதே அகமதாபாத் மைதானத்தில் மார்ச் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

இதனையடுத்து 4-வது டெஸ்ட் பிட்ச் எப்படி இருக்கும் என்று அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கேப்டன் ததேந்தா தைபூ நக்கலாக புகைப்படத்துடன் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் விவசாய நிலத்தில் உட்கார்ந்துக்கொண்டு கோலியும், ரூட்டும் ஆராய்ச்சி செய்வதுபோலும் பின்னாடி ஒரு டிராக்டர் வருவதுபோலவும் இருக்கிறது.

மேலும் அந்த ட்வீட்டில் ததேந்தா தைபூ "“4 வது டெஸ்ட் பிட்சை 2 கேப்டன்களும் பார்ப்பதுபோல் தெரிகிறது” என்று கிண்டலாக பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com