IPL 2023 Finals | “நமக்கு ரெண்டு Cup கிடைச்ச மாதிரி...” - நடிகர் சதீஷ் சொல்வதென்ன?

'தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்று அறிவித்திருப்பது நமக்கு ரெண்டு 'கப்' கிடைச்சா மாதிரி' என்கிறார் நடிகர் சதீஷ்.

அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டியை நேரில் கண்டுகளித்த நடிகர் சதீஷ் 'புதிய தலைமுறை'க்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “தோனி, அவர் சிக்ஸ் அடிச்சா கூட அமைதியாதான் இருப்பாரு. ஆனா ஜடேஜா அடிச்ச அந்த பவுண்டரிக்கு பிறகு, அவரை தோனி தூக்கி வைச்சு கொண்டாடினார். குஜராத்துல அவங்க அணி தான் ஆடுறாங்க. ஆனால் சி.எஸ்.கே ரசிகர்கள்தான் இங்க அதிகமா இருந்தாங்க. அதுக்கு காரணம் தோனி என்கிற ஒரேயொருத்தர்தான். தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்று அறிவித்திருப்பது ரெண்டு 'கப்' கிடைச்சா மாதிரி இருந்துச்சு” என்றார்.

நடிகர் சதீஷின் பேட்டியை வீடியோவடிவில் மேலே காணலாம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com