இந்தியா, இலங்கை, வங்காள தேசம், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளன. இதையடுத்து அபுதாபியில் 10ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. துபாயில் 11ம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.