கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் உடன் நேரடியாக கிரிக்கெட் போட்டிகள் விளையாட பிசிசிஐ மறுத்து வருகிறது. உலகக் கோப்பை, சாம்பியன்டிராஃபி, ஆசியக் கோப்பை போன்று ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும். அந்த வகையில், 20 ஓவா் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 24-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதால் இருநாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.