ரோகித் சர்மாவுக்காக விட்டுக் கொடுத்த சூர்யகுமார் யாதவ்!

ரோகித் சர்மாவுக்காக விட்டுக் கொடுத்த சூர்யகுமார் யாதவ்!
ரோகித் சர்மாவுக்காக விட்டுக் கொடுத்த சூர்யகுமார் யாதவ்!

துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட் செய்து 156 ரன்களை குவித்தது. 

ரோகித் சர்மாவுக்காக விட்டுக் கொடுத்த சூர்யகுமார் யாதவ்!

தொடர்ந்து விளையாடிய மும்பைக்காக ரோகித் ஷர்மாவும், டி காக்கும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். டி காக் 20 ரன்களில் வெளியேற ரோகித்தும், சூர்யகுமார் யாதவும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

அஷ்வின் வீசிய 11வது ஓவரில் சிங்கிள் எடுக்க முயன்றார் ரோகித். இருப்பினும் அதற்கு ‘நோ’ சொல்லியிருந்தார் சூர்யகுமார் யாதவ். அதற்குள் ரோகித் கிரீஸை  கடந்துவிட்டார்.

இரு பேட்ஸ்மேன்களும் ஒரே எண்டில் நிற்க ரோகித்துக்காக தனது விக்கெட்டை தியாகம் செய்தார் சூர்யகுமார் யாதவ். அவர் க்ரீஸை விட்டு வெளியே சென்று தானாக அவுட் ஆனார். ஒருவேளை அவர் க்ரீஸை விட்டு வெளியே வரவில்லை என்றால் ரோகித் சர்மா தான் அவுட் ஆகியிருப்பார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com