’யோ-யோ’ என்ற உடல்தகுதி தேர்வில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வெற்றிபெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு யோ-யோ உடல் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் தேறும் வீரர்கள் மட்டுமே அணியில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதன் காரணமாக மூத்த வீரர்களாக சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் இருந்து ஓரங்கப்பட்டிருந்தனர். இரண்டு மூன்று முறை இந்த டெஸ்ட்டில் தோல்வி அடைந்த யுவராஜ் சிங் சமீபத்தில் இதில் தேர்வானார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவும் இந்த டெஸ்டில் தேர்வாகியுள்ளார்.
’கடந்த சில நாட்களாக மேற்கொண்ட பயிற்சிக்குப் பின், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த யோ-யோ டெஸ்ட்டில் தேர்வாகிவிட்டேன். எனக்கு ஆதரவளித்த பயிற்சியாளர்கள், பிட்னஸ் டிரைனர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.