சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் - முதல் வெற்றியை பதிவு செய்யப் போவது யார்?

சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் - முதல் வெற்றியை பதிவு செய்யப் போவது யார்?
சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் - முதல் வெற்றியை பதிவு செய்யப் போவது யார்?

15-வது சீசன் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மும்பை மற்றும் புனேவில் கடந்த 26-ம் தேதி முதல் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 16 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் 17-வது ஆட்டத்தில், சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஐடேஜா தலைமையிலான சென்னை அணி பேட்டிங்கில் களமிறங்கிறது. சென்னை அணிக்காக ஜடேஜா களமிறங்கும் 150-வது போட்டி இதுவாகும். தோனி, ரெய்னாவிற்குப் பிறகு 3-வது வீரராக ஜடேஜா இந்த சாதனையை படைக்கிறார்.

இரண்டு அணிகளுமே இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தோல்வியடைந்துள்ளநிலையில், முதல் வெற்றியை பதிவுசெய்யும் நோக்கில் களமிறங்குகின்றன.

சென்னை அணி வீரர்கள்:

ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, எம்.எஸ். தோனி(விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி

சன்ரைசர்ஸ் வீரர்கள்:

அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com