பாராலிம்பிக்: வெள்ளிப்பதக்கம் வென்றார் ஐஏஎஸ் அதிகாரி சுஹாஸ் யாதிராஜ்

பாராலிம்பிக்: வெள்ளிப்பதக்கம் வென்றார் ஐஏஎஸ் அதிகாரி சுஹாஸ் யாதிராஜ்
பாராலிம்பிக்: வெள்ளிப்பதக்கம் வென்றார் ஐஏஎஸ் அதிகாரி சுஹாஸ் யாதிராஜ்
பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சுஹாஸ் யாதிராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுஹாஸ் யாதிராஜ், 21-15, 17-21, 15-21 என்ற செட் கணக்கில்,  பிரான்ஸ் வீரர் லூகாஸிடம் தோல்வியுற்றார். பாராலிம்பிக்கில் 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 18 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. சுஹாஸ் யாதிராஜ், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com