இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்

இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்

இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்
Published on

உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுகிறது.

உலகக் கோப்பை 2வது பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. வேல்ஸ் நாட்டில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டில் இலங்கை அணி டாஸ் வென்றது. அத்துடன் முதலில் பந்துவீசவும் தீர்மானித்தது. இதனால் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான அம்லா மற்றும் மார்க்ரம் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

21 (15) ரன்களில் மார்க்ரம் வெளியேற, மறுபுறம் அம்லா நிலையான ஆட்டத்தை தொடர்ந்தார். பின்னர் டு பிளஸிஸும் பொறுமையாக விளையாடி அம்லாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். டு பிளஸிஸ் அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடினார். அதில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தற்போது தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் என்பதாலும் பொறுமையுடன் விளையாடி வருகிறார். 35 பந்துகளில் 23 ரன்களை மட்டுமே அவர் எடுத்திருந்தார். தற்போது 55 பந்துகளில் 60 ரன்களை குவித்துள்ளார். அம்லாவுடம் அரை சதம் அடித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணி 21 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com