தொடர் தோல்விகளால் விசாரணையை எதிர்கொள்கிறது இலங்கை அணி

தொடர் தோல்விகளால் விசாரணையை எதிர்கொள்கிறது இலங்கை அணி
தொடர் தோல்விகளால் விசாரணையை எதிர்கொள்கிறது இலங்கை அணி

இலங்கை கிரிக்கெட் அணி சமீபத்தில் சந்தித்த மோசமான தோல்விகள் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜெயசேகரா, வீரர்களையோ, கிரிக்கெட் வாரியத்தையோ குறை சொல்லவில்லை என்றும், அதே வேளையில் தோல்விக்கான காரணங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி சமீபத்தில், ஜிம்பாவே உடனான தொடரில் தோல்வியை சந்தித்தது. அதேபோல் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் அனைத்துப் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது. தற்போது, இந்திய அணியுடன் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது அந்த அணி. இந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் இலங்கை தோல்வியடைந்தால், உலகக்கோப்பை போட்டியில் நேரடியாக பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com