ஜேசன் ஹோல்டர் அபார பந்துவீச்சு: பஞ்சாப் அணியை 125 ரன்களுக்கு சுருக்கிய ஹைதராபாத்

ஜேசன் ஹோல்டர் அபார பந்துவீச்சு: பஞ்சாப் அணியை 125 ரன்களுக்கு சுருக்கிய ஹைதராபாத்
ஜேசன் ஹோல்டர் அபார பந்துவீச்சு: பஞ்சாப் அணியை 125 ரன்களுக்கு சுருக்கிய ஹைதராபாத்

ஷார்ஜாவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை எடுத்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நினைத்த பஞ்சாப் தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் 21 ரன்களுடனும், மயாங்க் அகர்வால் 5 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணியில் அதிபட்சமாக மார்க்ரம் 27 ரன்களை எடுத்தார்.

மிச்சமிருந்த வீரர்கள் அனைவரும் மிகவும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியதால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் சந்தீஷ் சர்மா, ரஷீத் கான், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார், சமத் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தொடங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com