பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது ஐதராபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி

பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது ஐதராபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி

பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது ஐதராபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி
Published on
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஐதாராபாத் அணி தக்கவைத்துள்ளது.
துபாயில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 164 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் குவித்தார். ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர்-க்கு பதிலாக ஜோசன் ராய் சேர்க்கப்பட்டு தொடக்க வீரராக களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய அவர் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் வில்லியம்சன் பொறுப்பாக விளையாடி வாய்ப்பு கிடைத்த பந்துகளை பவுண்ட்ரி எல்லைக்கு விரட்டினார்.
இதனால் தொடர் தோல்வியால் துவண்டுவந்த ஐதாராபாத் அணி நீண்ட இடைவெளிக்கு பிறகு 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் 8ஆவது உள்ளது. எனினும் இதன்மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை நுழையில் தக்கவைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com