தென் ஆப்பிரிக்க வீரருக்கு கொரோனா: ஒத்திவைக்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டி

தென் ஆப்பிரிக்க வீரருக்கு கொரோனா: ஒத்திவைக்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டி
தென் ஆப்பிரிக்க வீரருக்கு கொரோனா:  ஒத்திவைக்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டி

தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இதன் முதல் ஆட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைகளின் முடிவில் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து டாஸ் போடுவதற்கு முன்பே ஆட்டம் நிறுத்தப்பட்டது. அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு இன்று மீண்டும் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

இதில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானால் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com