தொடரை வென்றது தென்னாப்ரிக்கா - டிஆர்எஸ் முடிவு அதிருப்தியில் சர்ச்சையான கோலியின் கோபம்

தொடரை வென்றது தென்னாப்ரிக்கா - டிஆர்எஸ் முடிவு அதிருப்தியில் சர்ச்சையான கோலியின் கோபம்

தொடரை வென்றது தென்னாப்ரிக்கா - டிஆர்எஸ் முடிவு அதிருப்தியில் சர்ச்சையான கோலியின் கோபம்
Published on

கேப்டவுன் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்க அணி. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2 - 1 என வென்றுள்ளது அந்த அணி. இதன் மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமென்ற தேடல் தொடர்கதையாகி உள்ளது. 

தென்னாப்பிரிக்க அணிக்காக இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பீட்டர்சன், ராசி வாண்டர் டூசன், பவுமா, எல்கர் ஆகியோர் சிறப்பாக விளையாடி இருந்தனர். 63.3 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் விக்கெட் வீழ்த்த தவறியதே தோல்விக்கு காரணமாகி உள்ளது. 

இந்த இன்னிங்ஸில் DRS முடிவு ஒன்று பெருத்த சர்ச்சையை எழுப்பி இருந்தது. கள அம்பயர் அவுட் கொடுக்க அதனை எதிர்த்து தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் DRS அப்பீல் செய்தார். அதில் அவருக்கு நாட்-அவுட் கொடுக்கப்பட்டது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இந்திய கேப்டன் கோலி கடுமையாக களத்தில் விமர்சனம் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com