இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி!
Published on

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 -1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது. இந்த தொடரில் மேலும் ஒரு போட்டி நடக்க உள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதையடுத்து இந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில், 4 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களை குவித்தது. பூனம் ராவத் 123 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 267 ரன்களை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் டாப் 4 வீராங்கனைகள் அரைசதம் கடந்து அசத்தினர். 

அதன் பலனாக 48.4 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்கா. இந்த வெற்றியின் மூலம் 3 - 1 என தொடரை அந்த அணி வென்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com