பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி
பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி மற்றும் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டது. அத்துடன் இருவரும் தங்கள் பதவிகளை ஏற்றுக் கொண்டனர். 

அத்துடன் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் தம்பி அருண்துமால் பிசிசிஐ பொருளாளராகவும் பதவியேற்றார். கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ், இணைச் செயலாளராகவும், மஹிம் வர்மா என்பவர் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றனர். இந்தக் கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com