இந்திய அணியை பாராட்டிய பிரதமர் மோடி; நன்றி தெரிவித்த கங்குலி!

இந்திய அணியை பாராட்டிய பிரதமர் மோடி; நன்றி தெரிவித்த கங்குலி!
இந்திய அணியை பாராட்டிய பிரதமர் மோடி; நன்றி தெரிவித்த கங்குலி!

ஆஸ்திரேலிய தொடரில் வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய அணியை பிரதமர் மோடி 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்து பேசினார். அதற்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றி குறித்து பிரதமர் மோடி இன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். அவர் கூறுகையில் “ இந்த மாதம் இந்திய கிரிக்கெட் ஆடுகளத்தில் இருந்து நல்ல செய்தி கிடைத்தது. தொடக்கத்தில் சரிவு காணப்பட்டாலும், இந்திய அணி உற்சாகமாக மீண்டு எழுந்து, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது. நம்முடைய அணியின் கடின உழைப்பு, கூட்டு உழைப்பு உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது” எனப் பாராட்டியிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்த சவுரவ் கங்குலி " ஆஸ்திரேலியாவில் வெற்றிப் பெற்ற இந்திய அணிக்கு, பிரதமர் மோடியின் ஊக்கமளிக்கும், உத்வேகம் அளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com