“தேவ்தத் படிக்கல் விரைவில் அணியுடன் இணைவார் என எதிர்ப்பார்க்கிறோம்” - ஆர்சிபி

“தேவ்தத் படிக்கல் விரைவில் அணியுடன் இணைவார் என எதிர்ப்பார்க்கிறோம்” - ஆர்சிபி
“தேவ்தத் படிக்கல் விரைவில் அணியுடன் இணைவார் என எதிர்ப்பார்க்கிறோம்” - ஆர்சிபி

வரும் வெள்ளி அன்று ஆரம்பமாக உள்ள ஐபிஎல் 2021 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பெங்களூரு அணியின் இளம் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் கூடிய விரைவில் அணியுடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என அந்த அணி தெரிவித்துள்ளது. 

“படிக்கலுக்கு கடந்த மார்ச் 22 ஆம் தேதியன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அப்போதிலிருந்தே அவரது வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்படும் ஆர். டி - பி. சி. ஆர் சோதனையில் நெகட்டிவ் என ரிப்போர்ட் வந்தவுடன் அவர் அணியினருடன் பயோ பபுளில் இணைவார். 

அவருடன் தொடர்ந்து அணியின் மருத்துவ குழுவினர் தொடர்பில் உள்ளனர். அவர் குணமடைந்து வருகிறார்” என பெங்களூரு அணி ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

முதல் போட்டியில் படிக்கல் விளையாடுவது சந்தேகம் தான் எனவும் சொல்லப்படுகிறது. கடந்த சீசனில் படிக்கல் 473 ரன்களை குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com