உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணிக்கு இப்படியொரு சிக்கல்!

உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணிக்கு இப்படியொரு சிக்கல்!
உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணிக்கு இப்படியொரு சிக்கல்!
Published on

தம்புல்லாவில் நாளை தொடங்கும் இந்தியாவுடனான ஒரு நாள் தொடரில், குறைந்தது 2 போட்டிகளிலாவது வெற்றிபெற்றால் மட்டுமே உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நிலை, இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி முதல் 5 இடங்களில் தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் உள்ளன. இலங்கை அணி 8-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 9-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 10-வது இடத்திலும் இருக்கின்றன. தம்புல்லாவில் நாளை தொடங்கும் இலங்கைக்கு எதிராக ஒரு நாள் தொடரை இந்திய அணி 5-0 அல்லது 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் 3-வது இடத்தை தக்கவைக்க முடியும். இலங்கை அணியை பொறுத்தவரை இந்தப் போட்டியில் குறைந்தது 2 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும். 

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், அடுத்த மாதம் 30-ம் தேதி நிலவரப்படி தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் அணிகள் மட்டுமே நேரடி தகுதி பெற முடியும். எஞ்சிய இரு இடத்திற்கு தகுதி சுற்றில் விளையாட வேண்டி இருக்கும்.

அந்த வகையில் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால், புள்ளி எண்ணிக்கை 90-ஆக உயர்ந்து 8-வது இடத்தில் நீடிக்கும். உலக கோப்பை போட்டிக்கும் நேரடி தகுதி பெற்று விடும். இதன் காரணமாக நாளை தொடங்கும் ஒரு நாள் தொடரில் இந்திய அணிக்கு, இலங்கை அணி கடும் சவாலாக விளங்கும் என்று தெரிகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com