தியோதர் டிராபி: மயங்க், சுப்மான் கில் அபார சதம், 366 ரன் குவித்தது இந்திய சி அணி!
தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய சி அணி, அபாரமாக ஆடி 366 ரன்கள் குவித்துள்ளது.
தியோதர் டிராபிக்கான உள்ளூர் ஒரு நாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. நவம்பர் 4-ஆம் தேதி வரை நடக்கும் இத்தொடரில் இந்தியா ஏ, பி, சி என மூன்று அணிகள் மோதுகின்றன. ஏ அணிக்கு ஹனுமா விஹாரி, பி அணிக்கு பார்திவ் பட்டேல், சி அணிக்கு சுப்மான் கில் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடந்த போட்டியில் இந்தியா ஏ -பி அணிகள் மோதின. இதில் பி அணி வெற்றி பெற்றது.
ராஞ்சியில் இன்று நடக்கும் போட்டியில், விஹாரி தலைமையிலான இந்தியா ஏ மற்றும் சுப்மான் கில் தலைமையிலான இந்தியா சி அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த இந்திய சி அணி, அபாரமாக ஆடி, 3 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வாலும் சுப்மான் கில்லும் இந்திய ஏ அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். மயங்க் அகர்வால் 111 பந்துகளில் 120 ரன்களும் சுப்மான் கில் 143 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் இந்திய சி அணி களமிறங்கியது. 19 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.