இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கான்பூரில் நாளை (வியாழக்கிழமை) காலை தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பே விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பந்த் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்கும் இந்திய அணி பெரும் சவாலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.