அக்‌ஷர் படேல், சாஹல் அசத்தல்: இந்திய ஏ அணி அபார வெற்றி

அக்‌ஷர் படேல், சாஹல் அசத்தல்: இந்திய ஏ அணி அபார வெற்றி
அக்‌ஷர் படேல், சாஹல் அசத்தல்: இந்திய ஏ அணி அபார வெற்றி

தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான போட்டியில், இந்திய ஏ அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து அதிகாரபூர்வமற்ற 5 ஒரு நாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி 6 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, ஷிவம் துபே 79 ரன்கள் எடுத்தார். அக்‌ஷர் பட்டேல், 36 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் விளாசினார். அடுத்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்க ஏ அணி, 45 ஓவர்களில் 258 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியின் ஹென்றிக்ஸ் 110 ரன்களும் விக்கெட் கீப்பர் கிளாசன் 58 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அக்‌ஷர் படேல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com