பிருத்வி ஷாவுக்கான தண்டனை கடுமையானது: வெங்சர்கர்

பிருத்வி ஷாவுக்கான தண்டனை கடுமையானது: வெங்சர்கர்

பிருத்வி ஷாவுக்கான தண்டனை கடுமையானது: வெங்சர்கர்
Published on

இந்திய அணியின் இளம் வீரர் பிருத்வி ஷாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை கடுமையானது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கர் தெரிவித்துள்ளார்.

சையது முஷ்டாக் தொடரில் விளையாடுவதற்காக, பிப்ரவரி மாதம் பிருத்வி ஷாவுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தை பிருத்வி ஷா உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜூலை 16 ஆம் தேதி அவர் மீது குற்றசாட்டும் முன் வைக்கப்பட்டது. இதையடுத்து, பிருத்வி ஷா இந்திய அணியில் விளையாட மார்ச் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான பிருத்வி ஷா இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார் என பலர் பாராட்டியுள்ளனர். சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரை 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி 237 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதமும் அவர் அடித்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை, கடுமையானது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வெங்சர்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘’ஷாவின் எளிமையான குடும்ப பின்னணி மற்றும் வயதை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை அளித்திருக்க வேண்டும். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வரும் வீரர்களிடம் தடை செய்யப்பட்ட மருந்துகள் பற்றிய விவரங்களை, மாநில அளவிலான கிரிக்கெட் அமைப்போ, தேசிய கிரிக்கெட் அகாடமியோ அல்லது பயிற்சியாளர்களோ தெரிவித்திருக்க வேண்டும்.

இருமல் மருந்தில் என்ன இருக்கும் என்பது சாதாரண குடும்ப பிண்ணனியில் இருந்து வரும் வீரர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு 8 மாத தடை என்பது அதிகப்பட்சம்தான். மூன்று நான்கு மாதங்களாக குறைத்திருக்கலாம்’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com