ஐபிஎல்லில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கு அனுமதி மறுப்பு

ஐபிஎல்லில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கு அனுமதி மறுப்பு
ஐபிஎல்லில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கு அனுமதி மறுப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் ஷகிப் அல் ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோருக்கு தடையில்லா சான்றிதழை வழங்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது.

இந்தியாவில் நடைபெற்ற 2021 ஐபிஎல் சீசன் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பாதியிலேயே தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர்- அக்டோபர் மாதத்தில் மீதமுள்ள ஆட்டங்களை நடத்த பிசிசிஐ சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ஷகிப் அல் ஹசன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்க தடையில்லாச் சான்றிதழ் வழங்க முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். இதனால் வங்கதேச வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com