‘பரிசாக கிடைத்த ரூ.3 கோடி’ - காட்டுத்தீ பாதிப்புக்காக அளித்த செரீனா

‘பரிசாக கிடைத்த ரூ.3 கோடி’ - காட்டுத்தீ பாதிப்புக்காக அளித்த செரீனா
‘பரிசாக கிடைத்த ரூ.3 கோடி’ - காட்டுத்தீ பாதிப்புக்காக அளித்த செரீனா

நியூசிலாந்தில் நடைபெற்ற WTA டென்னிஸ் தொடரில் பரிசுத்தொகையாக கிடைத்த 3 கோடி ரூபாயையும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க செரீனா வில்லியம்ஸ் முன்வந்துள்ளார்.

ஆக்லாந்து நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், ச‌கநாட்டவரான ஜெஸிக்கா பெகுலாவை செரீனா தோற்கடித்தார். கடந்த 3 ஆண்டுகளில் செரீனா வென்றுள்ள முதல் கோப்பை இதுவே ஆகும்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய செரீனா, போட்டியில் வென்ற சுமார் 3 கோடி ரூபாய் பரிசுத் தொகையையும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியாக அளிப்பதாக அறிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com