தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து இருந்தனர். அந்த நேரத்தில் யுவராஜ் சிங்கிற்கும், பிளண்டாப்பிற்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டது. பிளண்டாப் பேசிக் கொண்டே பீல்டிங் பக்கம் செல்ல, யுவராஜ் சிங் கோபமாக அவரை நோக்கி சென்றார். பின்னர் நடுவர் தலையிட்டு அவரை சமாதானப்படுத்தினார். 18வது ஓவரை பிளண்டாப்தான் வீசி இருந்தார். அந்த ஓவரின் 4,5வது பந்தில் பவுண்டரி அடித்திருந்தார் யுவராஜ். யுவராஜ் உடன் தோனி இருந்தார்.