முன்னிலையில் பிரான்ஸ் அணி - இரண்டாம் பாதியில் பதிலடி கொடுக்குமா குரேஷியா?

முன்னிலையில் பிரான்ஸ் அணி - இரண்டாம் பாதியில் பதிலடி கொடுக்குமா குரேஷியா?

முன்னிலையில் பிரான்ஸ் அணி - இரண்டாம் பாதியில் பதிலடி கொடுக்குமா குரேஷியா?
Published on

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி முன்னிலை பெற்றுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 2 கோல்களும், குரேஷியா அணி ஒரு கோலும் அடித்தன. 

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளுக்கு கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டன. போட்டியின் 20வது நிமிடத்தில் கிறிஸ்மேன் அடித்த பந்து குரேஷிய வீரர் மரியோ மன்ட்ஸ்யுக் தலையில் பட்டு சேம் சைடு கோலாக மாறியது. இதனால், பிரான்ஸ் முதல் கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. அடுத்த 8வது நிமிடத்திலே குரேஷிய வீரர் இவான் பெரிசிக் முதல் கோல் அடித்து அசத்தினார். இதனால், போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. 

இதனையடுத்து போட்டியில் அனல் பறந்தது. 37வது தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பிரான்ஸ் வீரர் கிறிஸ்மேன் அற்புதமாக கோலாக மாற்றினார். இதனால், பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் முதல் பாதியின் அடுத்த 8 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. கூடுதலாக இரண்டு நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. அதிலும் கோல் அடிக்கப்படவில்லை.

இந்நிலையில், முதல் பாதியின் முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால், இரண்டாவது பாதி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். குரேஷிய வீரர்கள் கோல்கள் அடிக்கும் முனைப்பில் செயல்படுவார்கள் என்று அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். முன்னிலையில் இருப்பதால் பிரான்ஸ் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com