காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் சதீஷ்குமார் சிவலிங்கம்

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் சதீஷ்குமார் சிவலிங்கம்
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் சதீஷ்குமார் சிவலிங்கம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் சதீஷ்குமார் சிவலிங்கம், வெங்கட் ராகுல் ஆகிய இந்திய வீரர்கள் தங்கம் வென்றனர்.

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ ‌எடைப் பிரிவில் பங்கேற்ற சதீஷ்குமார் ஸ்நாட்ச் முறையில் 148 கிலோ, கிளின் அண்ட் ஜெர்க் முறையில் 172 கிலோ என மொத்தம் 320 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு பிரிவில் பங்கேற்ற ராகுல் மொத்தம் 351 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமாரும், வெங்கட் ராகுலும் அடுத்தாண்டு நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com