இலங்கைக்கு எதிரான டி20 - சஞ்சு சாம்சன் திடீர் விலகல்

இலங்கைக்கு எதிரான டி20 - சஞ்சு சாம்சன் திடீர் விலகல்
இலங்கைக்கு எதிரான டி20 - சஞ்சு சாம்சன் திடீர் விலகல்

இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியுடன் முதற்கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்வணியில் சஞ்சு சாம்சனும் இடம்பெற்றிருந்தார்.

முதல் போட்டியில் அவர் பீல்டிங் செய்தபோது, காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் போட்டியிலிருந்து விலகினார். இந்த நிலையில், மீதி உள்ள இரண்டு போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக சமீபத்தில் நடைபெற்று முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் ஜொலித்த விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்குப் பதிலாக இத்தொடரில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன் சரியான பங்களிப்பை அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதையடுத்தே இந்திய அணி நீக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதல் போட்டியில் அவர் வெறும் 5 ரன்களில் வெளியேறியதும், அதே போட்டியில் ஒரு கேட்ச்சை தவறவிட்டதும் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

மும்பை மருத்துவமனையில் பிசிசிஐ மருத்துவக் குழு, இன்று பரிசோதனைக்கு உட்படுத்தியது, அதன்படி, அவரை சில வாரங்களுக்கு ஓய்வெடுக்க பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. உடற்தகுதிக்குப் பிறகு நியூசிலாந்து  டி20 தொடரில் அவர் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com