பூரானுக்கு முன்பே ஃபீல்டிங்கில் மாஸான சம்பவம் செய்துள்ள சஞ்சு சாம்சன்...!

பூரானுக்கு முன்பே ஃபீல்டிங்கில் மாஸான சம்பவம் செய்துள்ள சஞ்சு சாம்சன்...!
பூரானுக்கு முன்பே ஃபீல்டிங்கில் மாஸான சம்பவம் செய்துள்ள சஞ்சு சாம்சன்...!

நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நொடிக்கு நொடி அதிரடி சரவெடியாக இருந்தது. 

இரு அணி பேட்ஸ்மேன்களும் மொத்தமாக 449 ரன்களை குவித்திருந்தனர். 

அதிலும் ராஜஸ்தான் அணி பேட் செய்தபோது அந்த இன்னிங்ஸின் எட்டாவது ஓவரில் முருகன் அஷ்வின் வீசிய பந்தை சஞ்சு சாம்சன் டீப் மிட் விக்கெட் திசையில் ஓங்கி அடித்திருப்பார். பவுண்டரி லைனை கடந்து சிக்ஸருக்கு போன அந்த பந்தை ஒரே கையால் தடுத்து மைதானத்திற்குள் தூக்கி போட்டு ஃபீல்டிங்கில் கிரிக்கெட் உலகையே மிரள வைத்திருப்பார் பஞ்சபாப் அணியின் ஃபில்டர் நிக்கோலஸ் பூரான்.

இந்த ஃபீல்டிங் டி20 கிரிக்கெட்டின் மாஸ்டர் பீஸ் என கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்லி வர ‘நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா’  என  சொல்லும் அளவிற்கு பூரானுக்கு முன்பே கிட்டத்தட்ட அதே போல மாஸான சம்பவத்தை ஃபீல்டிங்கில் செய்துள்ளார் சஞ்சு சாம்சன். 

கடந்த ஜனவரியில் நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய  அணி டி20 தொடரை 5 - 0 என வொயிட் வாஷ் செய்து வென்றிருந்தது. இதில் இரண்டு சூப்பர் ஓவர் வெற்றிகளும் அடங்கும்.

அந்த தொடரின் கடைசி ஆட்டத்தில் ஷார்ட் மிட் விக்கெட் திசையை டார்கெட் செய்து நியூசிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டாய்லர் சிக்ஸர் அடிக்க முயன்றிருப்பார். அந்த இடத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த சஞ்சு சாம்சன் பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே காற்றில் பறந்த படி பிடித்து மைதானத்திற்குள் தூக்கி போட்டு இந்தியாவுக்காக நான்கு ரன்களை சேவ் செய்திருப்பார். 

அந்த போட்டியின்போது சஞ்சுவை கிரிக்கெட் ரசிகர்கள் பலர் ‘சூப்பர் மேன்’ என டேக் செய்து பாராட்டியிருந்தனர். 

தற்போது பூரானும் அதே போல ஃபீல்டிங்கில் செயல்பட்டதை சஞ்சுவின் ஃபீல்டிங்கோடு ஒப்பிட்டு வைரலாக பேசி வருகின்றனர். 

இதில் ஹைலைட் மற்றும் கனெக்டிவிட்டி என்னவென்றால் சஞ்சு மற்றும் பூரான் என இருவருமே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com