சானியா மிர்சா - சோயிப் மாலிக் உறவில் விரிசல்? - உறுதிப்படுத்தும் இன்ஸ்டாகிராம் பதிவு

சானியா மிர்சா - சோயிப் மாலிக் உறவில் விரிசல்? - உறுதிப்படுத்தும் இன்ஸ்டாகிராம் பதிவு
சானியா மிர்சா - சோயிப் மாலிக் உறவில் விரிசல்? - உறுதிப்படுத்தும் இன்ஸ்டாகிராம் பதிவு

சானியா மிர்சாவும் சோயப் மாலிக்கும் பிரிந்து வாழ்வதாக செய்திகள் கசிந்துள்ள நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது சானியாவின் பதிவு.

இந்தியாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இஷான் மிர்சா மாலிக் என்ற 4 வயது மகன் உள்ளார். குழந்தை பெற்ற பிறகும் சானியா தொடர்ந்து இந்தியாவுக்காக டென்னிஸ் விளையாடி வருகிறார். சமீபத்தில் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்தார் சானியா.

இதனிடையே, சானியாவும் சோயப் மாலிக்கும் தற்போது பிரிந்து வாழ்வதாக செய்திகள் கசிந்துள்ளன. டிவி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் சோயப் மாலிக், அதில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு சானியா மிர்சாவுக்கு துரோகம் இழைத்து வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அதற்கேற்றாற்போல் சானியா மிர்சாவின் சமீபத்திய வலைதளப் பதிவுகள் அவர் பிரிந்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

'உடைந்த இதயங்கள் எங்கு செல்கின்றன. அல்லாவைக் காண' என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்ஸில் பதிவிட்டிருக்கிறார் சானியா.  சில தினங்களுக்கு முன்பு தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சானியா அதில், 'இந்த தருணம் என்னை கடினமான நாட்களுக்கு கொண்டு செல்கிறது' என்று கூறியிருந்தார். ஆனால் இந்த விவகாரம் குறித்து இருவரில் யாருமே வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்கலாமே: சூர்யகுமார் யாதவ் Vs மார்க் வுட் - புவனேஷ்வர் குமார் Vs ஜோஸ் பட்லர்: இன்று என்ன நடக்கும்?


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com