
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா, சானியா இணைகள் காலிறுதியில் தோல்வியடைந்தன.
சின்சினாட்டி ஓபன் டென்னில் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் போபண்ணா- இவான் டோடிக் இணை, போலந்தின் லூகாஸ் கியுபட், பிரேசிலின் மார்சலோ மெலோ இணையிடம் 1-6, 7-6, 7-10 என்ற கணக்கில் போராடித் தோல்வியடைந்தது.
மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் சானியா மிர்சா, சீனாவின் ஷூவாய் பெங் இணை, சீன தைபேயின் சூ வெய், ருமேனியாவின் மோனிகா இணையிடம் 4-6 6-7 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்தது.