ஐபிஎல் இறுதிப்போட்டியை பார்க்க வராதது ஏன்?: மவுனம் கலைத்தார் சச்சின்

ஐபிஎல் இறுதிப்போட்டியை பார்க்க வராதது ஏன்?: மவுனம் கலைத்தார் சச்சின்
ஐபிஎல் இறுதிப்போட்டியை பார்க்க வராதது ஏன்?: மவுனம் கலைத்தார் சச்சின்

ஐபிஎல் இறுதிப் போட்டியை பிரபல பாடகி லதா மங்கேஷ்கருடன் அவரது வீட்டில் தொலைக்காட்சியில் கண்டுகளித்ததாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்தப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைப்பெற்றது. பரபரப்பான இந்தப் போட்டியில் வாட்சனின் அதிரடியால் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டி மும்பையில் நடந்தும் இதனைக் காண சச்சின் டெண்டுல்கர் நேரில் வரவில்லை. மும்பையில் நடந்த லீக் போட்டிகளை எல்லாம் சச்சின் நேரில் கண்டு களித்தார். இந்நிலையில் சச்சின் வராதது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. 

இதுதொடர்பாக சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் தெரிவித்துள்ளார். ஐபிஎல் இறுதிப்போட்டி மிகச்சிறப்பாக இருந்ததாகவும் அதை லதா மங்கேஷ்கருடன் சேர்ந்து பார்த்தது இன்னும் சிறப்பாக இருந்ததாகவும் டெண்டுல்கர் தன் பதவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன் மனைவி அஞ்சலியுடன் லதா மங்கேஷ்கர் அருகில் அமர்ந்திருப்பது போன்ற படத்தையும் சச்சின் பதிவிட்டுள்ளார். டெண்டுல்கரின் சொந்த ஊரான மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் சச்சின் பெயரில் ஒரு இருக்கைப் பிரிவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com