மாநிலங்களவையில் சச்சின் டெண்டுல்கர் அமர்ந்திருக்கும் காட்சி இணையதளங்களில் வைரலாக மாறியிருக்கிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்வானது முதல், தற்போதுவரை மொத்தம் 348 நாள்களில் 23 முறை மட்டுமே சச்சின் டெண்டுல்கர் அவைக்கு வந்திருக்கிறார். தற்போதுவரை அவருக்கு 58 லட்சத்து 80 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளதாக மாநிலங்களவை புள்ளிவிவரம் தெரிவி்க்கிறது.
இதன் மூலம் அவருக்கு ஒரு அமர்வுக்கு 2 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை அரசு செலவிட்டிருப்பதாகவும், அவர் அவைக்கு வருவதே அதிசய நிகழ்வுதான் மற்றும் இதுதான் டெண்டுல்கரின் குறைவான ஸ்கோர் எனக்கூறி நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.