கிரிக்கெட்: ஆட்டத்தை மாற்றிய ரன் அவுட்!

கிரிக்கெட்: ஆட்டத்தை மாற்றிய ரன் அவுட்!

கிரிக்கெட்: ஆட்டத்தை மாற்றிய ரன் அவுட்!
Published on

இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 
பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 335 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 119 பந்துகளில் 124 ரன்களும் பின்ச் 94 ரன்களும் குவித்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ரஹானே (53), ரோகித் சர்மா சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். ரஹானே அவுட் ஆனதும் களமிறங்கினார் கேப்டன் கோலி. இந்த ஜோடி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தது. குறிப்பாக ரோகித், தனது ராசியான மைதானம் என்பதால் அவ்வப்போது சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிபடுத்தினார். ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை. கோலி பந்தை அருகில் தட்டிவிட்டு எதிர்முனைக்கு ஓடிவர, நம்பி வந்தார் ரோகித். ஆனால், பாதியிலேயே கோலி திரும்பிவிட்டார். பின்னர் ஒரே இடத்தில் இருவரும். இதையடுத்து ரோகித் எதிர்முனைக்கு ஓடினார். அதற்குள் ரன் அவுட் செய்துவிட்டார் ரிச்சர்ட்சன்.
இந்த ரன் அவுட்தான் திருப்பு முனையாக மாறியது. இந்திய அணியின் வெற்றிப் பயணத்தை தடுத்தது இந்த ரன் அவுட்தான். ஸ்கோர் 135 ரன்களை எட்டிய போது, ரோகித் சர்மா 65 ரன் (55 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) வெளியேறினார். அடுத்து, கேதர் ஜாதவ் கேதார் ஜாதவ் 67 ரன்னும் பாண்டியா 41 ரன்னும் சேர்த்தனர். எனினும் ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com