``மெஸ்ஸி மட்டும்தான்... மெஸ்ஸிக்காக மட்டும்தான்” - மான்செஸ்டர் ராய் கீன் நெகிழ்ச்சி!

``மெஸ்ஸி மட்டும்தான்... மெஸ்ஸிக்காக மட்டும்தான்” - மான்செஸ்டர் ராய் கீன் நெகிழ்ச்சி!
``மெஸ்ஸி மட்டும்தான்... மெஸ்ஸிக்காக மட்டும்தான்” - மான்செஸ்டர் ராய் கீன் நெகிழ்ச்சி!

கத்தார் 2022 உலகக் கோப்பைத்தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் மோதவிருக்கும் நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லும் என்று கணித்துள்ளார் மான்செஸ்டர் அணியின் முன்னாள் ஜாம்பவான் ராய் கீன்.

பரபரப்பான போட்டிகள், வெற்றிகள், தோல்விகள், கண்ணீர், மகிழ்ச்சி, கொண்டாட்டம் என அனைத்தையும் கடந்து தற்போது இறுதிகட்டத்தில் இருக்கிறது 2022ஆம் வருடத்திற்கான கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடர். எப்போதும் இல்லாத வகையில் தகுதிசுற்றுப்போட்டிகளிலேயே புதிய அணிகள், பல ஜாம்பவான் அணிகளை பதம்பார்த்து வெளியேற்றினர். அடுத்தடுத்த நகர்வுபோட்டிகளில் பெரிய அணிகளை சோதனைக்குள் தள்ளிய சிறிய அணிகள், இந்த வருட பிஃபா கொண்ட்டாட்டத்தில் புத்துணர்ச்சியை அளித்தன. இந்நிலையில் விறுவிறுப்பான அரையிறுதிப்போட்டிகளில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள், குரோஷியா மற்றும் மொராக்கோ அணிகளை வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன.

நடப்பு சாம்பியன் அணிக்கும், உலகமே இவருக்கு தான் இந்த உலகக்கோப்பை செல்லவேண்டும் என்ற விருப்பமான அணியாக இருக்கும் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணிக்கும் இடையேயான இறுதிப்போட்டி நிச்சயம் ஒரு மறக்கமுடியாத போட்டியாகவே அமையவிருக்கிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜெண்டினாவே கோப்பையை கைப்பற்றும் என்று கணித்துள்ளார், முன்னாள் மான்செஸ்டர் வீரரான ராய் கீன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "உண்மையில் இது ஒரு சிறந்த இறுதிப்போட்டியாக மாறியுள்ளது. அர்ஜென்டினாவுக்கு, அவர்களுக்குப் பின்னால் உள்ள அனைத்து ஆதரவு, அணியின் ஆற்றல் மற்றும் லியோனல் மெஸ்ஸியின் அபார ஆட்டத்திறன் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் பிரான்ஸ் அணியைவிடவும் சற்று விருப்பமானவர்களாக உள்ளார்கள் என்றே நீங்கள் சொல்ல வேண்டும். உலகக்கோப்பையின் அரையிறுதியில் குரோஷியாவுக்கு எதிரான வெற்றியில் சிகரம் தொட்டார் லியோனல் மெஸ்ஸி. அப்போட்டியில் அவரது அற்புதமான திறமையை பார்த்தோம். அவர் அதை பல ஆண்டுகளாக அர்ஜெண்டினாவிற்காக செய்துள்ளார்” என்று கூறினார்.

மேலும் பேசுகையில், "மெஸ்ஸி அற்புதமானவர். களத்தில் அவர் விளையாடுவதை பார்ப்பது மிகவும் பிடிக்கும். உங்களுக்குத் தெரியுமா... அவர்கள் [அர்ஜென்டினா] வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். அதிலும் என் நம்பிக்கை, மெஸ்ஸிக்கு மட்டும்தான்... மெஸ்ஸிக்காக மட்டும் தான்” என்று தெரிவித்துள்ளார் ராய் கீன்.

முன்னதாக அர்ஜெண்டினா அணிபற்றி பேசியிருந்த ராய் கீன், “அர்ஜெண்டினா வீரர்கள் உலகக்கோப்பையை வெல்ல கவனமாக இருக்க வேண்டும். ஒரு வீரர் மட்டுமே, ஒரு உலகக்கோப்பையை வெல்வதற்கு தகுதியானவர் என்று கூற முடியாது. அர்ஜெண்டினா அணியினரும் மெஸ்ஸிக்கு உலகக்கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை பெற்று தரவேண்டும்” என்று கூறினார்.

அவர் கூறியதை போன்றே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது அர்ஜெண்டினா அணி. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டி கடினமானதாகவே இருக்கும், அந்த சவாலை தாண்டி அர்ஜெண்டினா அணி மெஸ்ஸியின் கையில் கோப்பையை பெற்றுக்கொடுக்கிறதா என்று ஞாயிற்று கிழமை வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com