பாலியல் புகார் : போர்ச்சுக்கல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கம்

பாலியல் புகார் : போர்ச்சுக்கல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கம்
பாலியல் புகார் : போர்ச்சுக்கல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கம்

அடுத்தடுத்து நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ள போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணியில் இருந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ நீக்கப்பட்டுள்ளார். ரொனால்டோ மீது அமெரிக்காவில் கூறப்பட்டுள்ள பாலியல் புகாரால் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கேத்ரின் என்பவர் ரொனால்டோ மீது பாலியல் புகார் ஒன்றை கூறியுள்ளார். கடந்த 2009-ல் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாசில் ரொனால்டோ தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கேத்ரீன் கூறியுள்ளார். ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை என ரொனால்டோ மறுத்துள்ளார். இந்நிலையில் புகார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது

இதனிடையே, போர்ச்சுகல் அணி விளையாட உள்ள சில போட்டிகளுக்கான வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரொனால்டோவின் பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து கேட்ட போது “ அவர் மீதான பாலியல் புகார் விசாரணையில் இருக்கும் போது, தேசிய அணியில் இடம்பெற்று விளையாடுவது சரியாக இருக்காது” என கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com