"இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப ரோகித் சர்மா விளையாடுவார்"- பயிற்சியாளர் நம்பிக்கை

"இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப ரோகித் சர்மா விளையாடுவார்"- பயிற்சியாளர் நம்பிக்கை
"இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப ரோகித் சர்மா விளையாடுவார்"- பயிற்சியாளர் நம்பிக்கை

இங்கிலாந்தின் ஆடுகள சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக்கொண்டு ரோகித் சர்மா விளையாடுவார் என்று அவரது சிறுவயது கிரிக்கெட் பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம் செய்து அந்நாட்டுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. மேலும் ஜூன் 18-ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. அதற்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா குறித்து அவரது பயிற்சியாளர் தினேஷ் லாட் பேட்டியளித்துள்ளார் அதில் "ரோகித் இங்கிலாந்தில் இன்னும் சிறப்பாக கவனம் செலுத்தி விளையாட வேண்டும். அண்மையில் நடந்து முடிந்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவான ஆடுகளத்தில் பலரும் விளையாட சிரமப்பட்டபோது ரோகித் சர்மா சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விளையாடினார். அதேபோல இங்கிலாந்து தொடரிலும் அவர் விளையாடுவார்" என்றார்.

மேலும் பேசிய அவர் "இங்கிலாந்தில் இருக்கும் வேகப்பந்துவீச்சுக்கு ஏதுவான ஆடுகளம் சவாலானதாகவே இருக்கும். ஆனால் அந்து ஆடுகளத்துக்கு ஏற்ப ரோகித் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். நிச்சயம் அவர் சூழ்நிலைக்கு ஏற்ற ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார் என நம்புகிறேன். அதற்காவே அவர் பிரத்யேக வலைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்" என்றார் தினேஷ் லாட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com