'விராட் கோலியின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது' - மனம் திறந்த ரோஹித் ஷர்மா

'விராட் கோலியின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது' - மனம் திறந்த ரோஹித் ஷர்மா
'விராட் கோலியின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது' - மனம் திறந்த ரோஹித் ஷர்மா

விராட் கோலியின் முடிவு அதிர்ச்சியளிப்பதாகவும் ஒரு கேப்டனாக வெற்றிகரமாக செயல்பட்டதாகவும் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என தோல்வி அடைந்தது. இச்சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை விராட் கோலி அறிவித்தார். டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து ஏற்கனவே விராட் கோலி விலகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விராட் கோலியின் முடிவு அதிர்ச்சியளிப்பதாகவும் ஒரு கேப்டனாக வெற்றிகரமாக செயல்பட்டதாகவும் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். தற்போது ரோஹித் ஷர்மா இந்திய கிரிக்கெட் அணியின் ஒயிட் பால் போட்டிக்கு (ஒருநாள் ஆட்டம் மற்றும் 20 ஓவர்) கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com